ஒருவர் மழையில் நனைந்தால் காய்ச்சல் உண்டாகும், சளி உண்டாகும் என்று நம்புவாரேயானால், ஆரோக்கியமான உடல் இருந்தாலும் அவர் நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்தினால் மழையில் நனைந்தால் அவை உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

அது செய்தால், அந்த நோய்கள் உண்டாகும், இந்த வயதில் இந்த நோய்கள் உண்டாகும் என்று ஒருவர் மனதாலே நம்பிக்கை கொண்டுவிட்டால், நோய் உண்டாக எந்த காரணியும் இல்லாமலேயே அவர் நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்தினால் அவை உண்டாக கூடும்.

மனதினால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அதனால் எவற்றை அறிந்துக் கொள்கிறோம், எவற்றை நம்பிக்கை கொள்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.