இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், பிறப்பின் அடிப்படையில் ஒரு தனிப்பட்ட சிந்திக்கும் வழிமுறை (thinking pattern) இருக்கும். இந்த வாழ்க்கையைப் பற்றிய சுயப் பார்வை இருக்கும். ஒரு தனிப்பட்ட இயல்பு இருக்கும். ஒரு தனிப்பட்ட குணாதிசயம் இருக்கும்.

மேலும் அவர்கள் தன் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட விசயங்களைக் கொண்டும், வாழ்க்கை அனுபவங்களை கொண்டும், ஒரு தனிப்பட்ட இயல்பு உருவாகும். 

இவை அனைத்தும் சேர்ந்து ஒரு மனிதனின் சுய குணாதிசயத்தை முடிவு செய்கின்றன.