உண்மையான குரு என்பவர் தன்னை குரு என்று அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார். உலக ஆசையில் மூழ்க மாட்டார். யாருக்கும் எதையும் வழிந்து கற்றுத்தர மாட்டார். தனது நம்பிக்கைகளை மற்றவர் மீது திணிக்க மாட்டார்.

செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்காது. பணத்துக்காக எதையும் செய்ய மாட்டார். சிஷ்யர்களை உருவாக்காமல், புதிய குருக்களை உருவாகவே ஆசைப்படுவார். தன்னைப் போன்று மற்றவர்களையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளவரே உண்மையான குரு.