தியானம் என்பது உடல், மனம், புத்தி மற்றும் உடலின் ஆற்றலைச் சீராகவும், நம் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்திருக்க உதவும் ஒரு பயிற்சியாகும். தியானம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும், அதேநேரத்தில் இந்த உலக வாழ்க்கையை விழிப்புணர்வோடு வாழ்வதற்கும் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.