அவன் திமிர் பிடித்தவன், அவன் கெட்டவன், அவன் பொறாமை பிடித்தவன், என்று குற்றச்சாட்டும் பலர், தங்களுடைய குணங்கள் எதிரியிடமும் இருக்கும் என்று நம்புவதால் ஏற்படும் விளைவுகள் தான் இவை. பிற மனிதர்களிடம் நீங்கள் காணும் குணாதிசயங்கள், பெரும்பாலும் வெறும் கண்ணாடியைப் போன்று பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. உங்களுடைய குணாதிசயங்களைத்தான் நீங்கள் பிறரிடம் காண்கிறீர்கள்.

மேலும் மனிதர்கள் எனது ஆசையும் தேவையும் நிறைவேறினால் போதும் என்று இருப்பதால், பெரும்பாலானவர்கள் மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் சுயநலவாதிகளாகவும் தீயவர்களாகவும் இருக்கிறார்கள்.